பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு :

பாலக்கோடு எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 25-ம் தேதி முதல் இளங்கலை பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-22-ம் கல்வி யாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி வரும் 25-ம் தேதி விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர், என்சிசி உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும்.

26 மற்றும் 27-ம் தேதிகளில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் பொதுவான சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். எனவே, கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் தொலைபேசி மூலம் தகவல் பெறும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE