காஞ்சிபுரத்தில் சூதாட்டம்: 4 பேர் கைது :

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், மல்லிகை தோட்டம், மாதா கோயில் பின்புறத்தில் அரசால் தடை செய்யப்பட்டு சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்பி சுதாகர் கூறும்போது, "காஞ்சி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் பெட்டிங், சூதாட்டம், கள்ளத்தனமாக மது விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE