முஷ்ணம் அருகே இளைஞர் கொலை? :

முஷ்ணம் அருகே உள்ள கானூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் குணராஜ் (32). இவர் கடந்த 8-ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள அமல்ராஜ் என்பவர் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். அந்த வீட்டில் யாரும் இல்லை.

இந்த நிலையில் அன்று நள்ளிரவில் குணராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்த போது குணராஜ் தலையில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை அவர் உயிரி ழந்தார். இது குறித்து நேற்று அவரது தந்தை ஆரோக்கியசாமி முஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் சரியான முடிவு தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்