நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 16-ம் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில், செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் கிராமங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, "நெல் மூட்டைகளை விற்பனை செய்ய https://tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணையதள வழியில் முன்பதிவு செய்து வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வர வேண்டும்’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE