வாணியந்தாங்கலில் தீமிதி திருவிழா :

திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 11-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா, 4-வது வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது.

அப்போது, காப்பு கட்டி விரதம் இருந்த 110 பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE