திருப்பூர் ஊர்க்காவல் படை வீரர் கைது :

திருப்பூர் - அவிநாசி சாலை முருங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிகிருஷ்ணன் (29). திருப்பூர் மாநகர ஊர்க்காவல்படை வீரர். பிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் துர்காதேவி (25). கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம்செய்துகொள்ளுமாறு ஜோதிகிருஷ்ணனிடம் துர்காதேவிகூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். விரக்தியடைந்த துர்காதேவி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், ஜோதிகிருஷ்ணனை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE