கேட்பாரற்று கிடந்த 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் :

போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த 52 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸார் ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கேட்பாரற்று கிடந்த 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பாளேதோட்டம் ஏரிக்கரை மற்றும் வெப்பாலம்பட்டி கெட்டு ஏரி பகுதிகளில் கேட்பாரற்று இருந்த 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும், ஊத்தங்கரை போலீஸார் ஊத்தங்கரை பேருந்து நிலையம், சென்னப்பநாயக்கனூர் வேடியப்பன் கோயில், திப்பம்பட்டி சாய்பு ஏரி பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த 22 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE