சிறப்பு ரயில் பெட்டிகள் தேவை என வலியுறுத்தி - மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். ரயில் நிலையங்களில் மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகளை உடனே இயக்க வேண்டும். புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போல மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்க வேண்டும். நடைமேடை கட்டணம் ரூ.50 என்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் எம்.மருதபெருமாள், தமிழக மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க செயலாளர் பி.ஜெயராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய செயலாளர் பி.முத்துமாலை, நகர தலைவர் ஜெ.அந்தோணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையமுன் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.தியாகராஜன், செயலாளர் எஸ்.குமாரசுவாமி, இணைச் செயலாளர் கற்பகம் ஆகியோர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE