கிருஷ்ணகிரி : ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்புச்சாரா நலவாரிய ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட பொருளாளர் வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் முனியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட துணை பொருளாளர் சீனிவாசன் நன்றிகூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE