நெல்லை மலபார் கோல்டு ஷோரூமில் நகை கண்காட்சி :

திருநெல்வேலி மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கண்காட்சியை ராமசாமி ராஜா, முத்துபாண்டியன், அர்ச்சனா மாரி பாண்டியன், லட்சுமி நடராஜன், அனிதா சித்தார்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

துணை கிளை மேலாளர் நிஷாந்த் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி நாளை வரை நடை பெறுகிறது.

கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.

வைர நகைகளான ‘மைன்’,பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’,மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்,’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ , குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE