கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரத்தில் 150 பேருக்கு கரோனா :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 42 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 29,287-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 60,787 பேருக்கு தொற்று ஏற்பட்டு நேற்று 75 பேர் உட்பட 59,255 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 815 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 44,005 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 42 பேர் உட்பட 43,305 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்