வேலூரில் : காணொலி வாயிலாக பி.எப் குறைதீர்வு கூட்டம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்) அலுவலகத்தில் வைப்பு நிதி செலுத்தும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தை சேர்ந் தோருக்கான குறைதீர்வு கூட்டம் வரும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் நடைபெறவுள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் இதர அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டம் காணொலி வாயிலாக http://meet19.wenbex.com/meet/pr1266655945 என்ற இணைப்பின் வழியாக நடை பெறும். எனவே, குறைகளை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ்-4, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பேஸ்-3, சத்துவாச்சாரி, வேலூர்-9 என்ற முகவரிக்கு வரும் 8-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும், 0416-2906001/5 என்ற எண்ணில் அல்லது ro.vellore@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE