திருப்பூரில் 22 கோயில்களில் தூய்மைப் பணி :

கரோனா தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றுஆடிக்கிருத்திகை, ஆடிப் பெருக்கையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக் கப்படவில்லை.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 22 கோயில்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும்கோயில் பணியாளர்கள்,மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக, மாநகரின் மையத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE