முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா :

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உறைவிட மருத்துவர் அகத்தியன் வரவேற்றார்.நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன்தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வாழ்த்துரையாற்றினார்.

கரோனா காலத்தில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நன்கொடை வழங்கிய சோகா நிறுவனம், ரோட்டரி சங்கம், சாந்தி மருத்துவமனை, சேவாலயா நிறுவனம், திருநெல்வேலி கேன்சர் கேர் சென்டர் நலவாழ்வு மையம், அமர்சேவா சங்கம் மற்றும் வியாபாரிகள் நலச்சங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காசநோய் துணை இயக்குர் வெள்ளைச்சாமி, மருத்துவர்கள் கிருஷ்ணன், லதா, கீதா, அனிதா பாலின், கார்த்திக் அறிவுடைநம்பி, உமா மகேஸ்வரி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர்கள் ராமசுப்பு, முத்தையா, மருத்துவர்கள் மகேஸ்வரி, இஸ்மாயில், சுப்பிரமணியம், முகைதீன் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE