2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி :

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் தற் போது நடைபெற்று வரும் குறுவை அறுவடையை முன் னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் தூத்தூர் கிராமத்தில் இன்று(ஜூலை 30) முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, முத்துவாஞ்சேரி கிராமத்தில் ஆக.4-ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுகிறது.எனவே, இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE