கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக 3 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கரூரில் தையல்காரரிடம் கூடுதல் வட்டிக் கேட்டு மிரட்டியதாக 3 பேர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் ஜவஹர் பஜாரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவர், சபரி, விஸ்வா ஆகியோரிடம் 15 நாட்களுக்கு ஒருமுறை ரூ.1,000 வட்டி செலுத்துவதாகக் கூறி, தலா ரூ.10,000 கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சபரி, விஸ்வா ஆகியோர் அவர்களது நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து கடன் தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு ராஜேந்திரனை அண்மையில் ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சபரி, விஸ்வா, கார்த்திக் ஆகிய 3 பேர் மீது கரூர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE