சரக்கு வேன் கவிழ்ந்து இளைஞர் மரணம் :

தேவிபட்டினம் அருகே மீன் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அந்தோணிராஜ்(20). அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் உலகுதுரை(23).

இவர்கள் இருவரும் நேற்று தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடிக்கு சரக்கு வேனில் மீன் ஏற்றிச் சென்றனர். அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் தேவிபட்டினம் முத்துரெகுநாதபுரம் அருகே வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வேனை ஓட்டிச் சென்ற உலகுதுரையைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE