வயதான தம்பதி கொலையில் மேலும் 3 பேர் கைது :

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தில் கடந்த 13-ம் தேதி விவசாயி கிருஷ்ணன்(80), அவரது மனைவி சுலோச்சனா (75) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் திருட்டில் ஈடுபட வந்த கும்பல் தம்பதியை கொலை செய்தது தெரிந்தது.

இதுதொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த 16-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பில்பருத்தி பகுதியைச் சேர்ந்த வேலவன் (24), சந்துரு (22), எழிலரசன்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE