புதிதாக 159 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் 159 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 27 பேருக்கு தொற்று உறுதியானது. 31 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்த நிலையில், 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 28 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. அங்கு 37 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 51,276-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்