மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி :

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து திறந்து வைத்து பார்வையிட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மகளிர் குழுக்கள் செய்து வரும் தொழில்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE