கல்லூரி பேராசிரியை கொலை வழக்கில் ஆசிரியர் கைது :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரி பேராசிரியை அனிதா(45) கொலை தொடர்பாகநாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சுதாகர்(42) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் கூறும்போது,, "கதவு தாழிப்பட்ட நிலையில் இருந்ததால் அனிதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றே நினைத்தோம். ஆனால், உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் அனிதா அறையில் கிடந்த பொருட்கள் அவர் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தின. அனிதாவும், சுகாதாகரும் ஏற்கெனவே ஒன்றாக பணி செய்துள்ளனர். இதில் இருவருக்கும் அறிமுகம் இருந்துள்ளது.

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இக்கொலை நடந்துள்ளது. கொலை நடக்கும்போது தன்னை காப்பாற்றிக் கொள்ள அனிதா சுதாகரை வெளியில் தள்ளி கதவை தாழிட்டுக் கொண்டார். ஆனால், ஏற்கெனவே கத்தியால் குத்தப்பட்டதால் அவர்அறைக்குள்ளேயே இறந்துள்ளார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE