கணவருடன் தகராறு: பெண் தற்கொலை :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் மாலதி(41). இவர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்த தனசேகரனை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் ஆசித்(4). தனசேகரன், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகி றார். மாலதி, காசா காலனியில் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தனசேகரனுக் கும், மாலதிக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்பு, தனசேகரன் தூங்கிவிட்டார். விரக்தி அடைந்த மாலதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவில் எழுந்த ஆசித், தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதுள்ளார். மகனின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த தனசேகரன், துப்பட்டாவை அறுத்து மனைவி யின் சடலத்தை கீழே இறக்கிப் போட்டுவிட்டு போதையில் மீண்டும் தூங்கிவிட்டார். இதனால் ஆசித் அழுது கொண்டே வீட்டுக்கு வெளியே வந்துள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் மாயனூர் போலீஸார் அங்கு வந்து எழுப்பியும் தனசேகரன் எழுந்திருக்காத தால், போலீஸார் விடியும் வரை காத்திருந்து, நேற்று காலை தனசேகரனிடம் விசாரணை நடத்திய பின்பு, மாலதியின் சடலத்தை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக் குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE