13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே நாலு கோட்டையில் உள்ள ஒரு குடோனில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேலு, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் மைலாவதி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர். அங்கிருந்த சிலர், அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடினர். இதையடுத்து 13 டன் ரேஷன் அரிசியையும், 3 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE