நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள - கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : அமைச்சர் ஆர்.காந்தி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கரோனா தடுப் பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை நவல்பூரில் தமுமுக சார்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக நகரத் தலைவர் அஸ்மதுல்லா தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, மாவட்ட சுகாதார பணிகள்துணை இயக்குநர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள அனைவரும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றவர்களிடம் தெரிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்