கமுதி அரசு மருத்துவமனைக்கு - ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கிய சேவா பாரதி அமைப்பினர் :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சேவாபாரதி அமைப்பினர் வழங்கினர்.

கமுதி அரசு மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகள் பயன் பெறும் வகையில், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை, சேவாபாரதி அமைப்பினர் இலவசமாக வழங்கினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மண்டலச் செயலாளர் நாகராஜன் இயந்திரத்தை வழங்க, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஜயா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொருளாளர் கணபதி, சேவாபாரதி இயக்க நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துவேல், கண்ணதாசன், ஒன்றியச் செயலாளர் முத்து இருளப்பன், பாஜக கமுதி ஒன்றிய இளைஞரணி தலைவர் போ.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE