பிளஸ் 2 தேர்வு குறித்த கருத்துகேட்பு :

கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, இன்று (3-ம் தேதி) மதியம் 12 மணிக்குள் 98949 76981 அல்லது 98422 67069 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல், 14417 என்ற தொலைபேசி எண்ணிலும் கருத்து தெரிவிக்கலாம். இத்தகவலை, தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் சீ.கருப்புசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்