ராணிப்பேட்டையில் கரோனா தடுப்பூசி : விழிப்புணர்வு பாடல் வெளியீடு :

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் எழுதிய கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடலை பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான கிரிஷ் வெளியிட்டார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே சிறந்த வழியாக கூறப்படுகிறது. இதற்காக, தடுப்பூசி முகாம்களை அதிகளவில் நடத்துவதுடன் அதில் பொதுமக்களை அதிகம் பங்கேற்க வைத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் பாடலை பிரபல பாடகரும் இசை அமைப்பாளருமான கிரிஷ் மற்றும் குழுவினர் பாடியுள்ளனர். வீடியோ காட்சிகளை ராம் கோபி எடிட் செய்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக ஒளிபரப்பு செய்யப் பட உள்ள இந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் முன்னிலை யில் பாடகரும் இசையமைப்பாள ருமான கிரிஷ் இந்தப் பாடலை வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்