பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாக - கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் :

பாலியல் தொழிலில் ஈடுபட கணவர் கட்டாயப்படுவத்துவதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜபீனா(24) என்பவர் தனது 2 மகன்களுடன் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து தனது கணவர் நாத் (32) என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்ப தாவது, "ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், ஒய்.எஸ்.காலணியைச் சேர்ந்தவர் நாத். இவர், என்னை காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு முகமதுஷபி (8), அசேன் (6) என 2 மகன்கள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு எனது கணவர் நாத் மது பழக்கத்துக்கு அடிமையானார். பல பெண்களுடன் கூடாநட்பு வைத்திருந்தார். இதை நான் எதிர்த்த போது என்னையும் எனது மகன்களையும் அவர் தாக்கினார். எங்களை பல முறை கொலை செய்யவும் முயன்றார்.

இது குறித்து சித்தூர் மாவட்ட காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையத்தில் நான் புகார் அளித்ததை தெரிந்துக்கொண்ட நாத் எங்களை மேலும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

இதனால், அவரை பிரிந்த நான் எனது 2 மகன்களுடன் எனது தாயார் வீடான வாலாஜா அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்துவிட்டேன். இந்நிலை யில், கடந்த 27-ம் தேதி எனது தாய் வீட்டுக்கு வந்த நாத் என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும், என்னை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டினார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு அம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்