கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் :

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கரோனா தொற்று தடுப்பு சிகிச்சைகள் தொடர்பாக கண்காணிக்க மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கரோனா தடுப்பு குறித்த ஆலோ சனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு சிகிச்சை குறித்த ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள கோவைக்கு வணிகவரி ஆணையர் மு.அ.சித்திக், திருப்பூருக்கு வேளாண்துறை செயலர் சி.சமயமூர்த்தி, ஈரோட்டுக்கு நில அளவை திட்ட இயக்குநர் இரா.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்