கூலித் தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் :

திருப்பூர் மாவட்டம் உடுமலையைஅடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி சார்பில் கூலித் தொழிலாளர்கள் 122 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கொண்டதொகுப்பை ஊராட்சி தலைவர் காமாட்சி அய்யாவு வழங்கினார் ஊராட்சி மன்ற உறுப்பினர் தெய்வானை தலைமை வகித்தார்.

இதேபோல, உடுமலை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் சர்ஜிகல் மாஸ்க் மற்றும் 200 கிலோ பப்பாளி இலவசமாக விநியோகிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் பெ.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE