கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 613 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 30,394 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 358 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 26,348 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,831பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை இம்மாவட்டத்தில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 597 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 44,863 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 817 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 36,896.பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருந்தோரில் 9 பேர் நேற்று உயிரிழந்தனர். இதுவரை இம்மாவட்டத்தில் 458 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 376 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 18,973 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் 126பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE