முள்ளிப்பாடி தூய்மை காவலர்களுக்கு உதவி :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப் பாடி கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலர் களுக்கு கரோனா நிவாரணமாக உணவுப்பொருட்களை ஊராட்சித்தலைவர் மாதவி வழங்கினார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றி யம், முள்ளிப்பாடி ஊராட்சி யில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பி.ஆர்.என்.பி.பள்ளி நிர்வாகம் சார்பில் கரோனா நிவாரணமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முள்ளிப்பாடி ஊராட்சித் தலைவர் மாதவி அரிசி உள்ளிட்ட பொருட்களை தூய்மைக்காவலர்களுக்கு வழங்கினார்.

மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச் சந்திரன், ஊராட்சி செயலாளர் வசந்தகுமார், 3-வது வார்டு உறுப்பினர் ஜான்பீட்டர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE