ஆற்காட்டில் திருமண மண்டபத்துக்கு ‘சீல்' :

முழு ஊரடங்கு காலத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கிய திருமண மண்டபத் துக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி தலை மையில் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுநாதன், கிராம உதவியாளர் அரவிந்தன் ஆகியோர் ஆற்காடு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆற்காடு புறவழிச்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கட்டுப்பாடுகளை மீறி 50 பேர் கலந்து கொண்ட திருமண விழா நடை பெறுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி ஆட்களை திரட்டி திருமணம் நடத்த அனுமதியளித்த திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தவருவாய்த் துறையினர் மண்டபத்துக்கு ‘சீல்' வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE