குமரியில் 1,200 பேருக்கு கரோனா பாதிப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,200-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 19 பேர் மரணமடைந்தனர். தற்போது 7,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 843 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். தற்போது 7,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 339 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 341 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 171 பேர் உட்பட இதுவரை 15 ஆயிரத்து 200 பேர் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 486 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று 734 பேர் உட்பட இதுவரை 33 ஆயிரத்து 120 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6,352 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றால் 6 பேர் நேற்று உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE