கரோனா நிவாரணம் பெற நாளைவரை டோக்கன் விநியோகம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா நிவாரண நிதி பெறுவதற்கு நாளை வரை (மே 12) டோக்கன் வழங்கப்படும் .

இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில், பல்வேறுதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் திட்டத்தின் கீழ் மே 15-ம் தேதி முதல்அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.2,000 கரோனா நிவாரண நிதி வழங்கப்படும். இதற்காக டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி (நாளை) வரை டோக்கன் வழங்கப்படும். இதுகுறித்த பட்டியல் நியாயவிலைக் கடைகளில் ஒட்டி வைக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளதேதிகளில் சென்று, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று, நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE