அண்ணாதுரை சிலைக்கு எம்எல்ஏ சரவணன் மரியாதை :

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா துரை சிலைக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, “கலசப்பாக்கம் தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு செய்து தருவார். வாக்களித்த மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கலசப் பாக்கம் தொகுதியின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன்” என்றார்.

இதில், ஒன்றியக்குழு தலைவர்கள் அன்பரசி, சுந்தரபாண்டியன், ஒன்றியச் செய லாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE