திண்டுக்கல் கொலை வழக்கில் 7 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் பணம் தர மறுத்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (43). இவர், வீடுகளை வாட கைக்கு விட்டு, அதன் மூலம் வருவாய் பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல்லில் உள்ள பழநி சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிலர் ராம்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி யோடினர். இதில் படுகாயமடைந்த ராம்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராம் குமாருக்கு கடை, வீடுகள் வாடகை என வருமானம் அதி களவில் வருவதால் இவரிடம் பணம் கேட்டு இவருடன் பழகிய நபர்களே மிரட்டியுள்ளனர். இவர் தர மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்து மீண்டும் பணம் கேட்டு குடிபோதையில் மிரட்டி தகராறு செய்துள்ளனர். ராம்குமார் பணம் தர மறுக்கவே, அவரைக் கத்தியால் குத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இக்கொலை தொடர்பாக திண்டுக்கல் கவடக்காரத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (29), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சிவராஜா (34), ஆர்.வி. நகரைச் சேர்ந்த கோகுல் (21), குணசீலன் (23), சதீஷ்குமார் (22), மேற்கு அசோக் நகரைச் சேர்ந்த சசிகுமார், ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்த சஞ்சய்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்