வந்தவாசி அருகே : மண் கடத்தியதாக இருவர் கைது :

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாப்பாநல்லூர் ஏரியில் நேற்று முன்தினம் மண் திருடப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து தெள்ளார் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பார்வையிட்டனர். அப்போது அங்கு ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் மண் கடத்தும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மண் கடத்தலில் ஈடுபட்ட தெள்ளாரைச் சேர்ந்த நாராயணன், மாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் அய்யனார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ‘பொக்லைன்’ இயந்திரம் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்