நெடுஞ்சாலை ரோந்து வாகனம் வருகை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், தமிழக அரசால் புதிய ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரோந்து வாகனத்தை எஸ்பி சுகுணாசிங் தொடங்கிவைத்தார். போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, தனிப்பிரிவு ஆய்வாளர் தாமரை விஷ்ணு, உதவி ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

``நெடுஞ்சாலை ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துக்களை தடுப்பதற்கும் புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ரோந்து பணியை தீவிரப்படுத்த முடியும்” என்று எஸ்பி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE