மரத்தில் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு :

சங்கரன்கோவில் அருகே உள்ள வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பொய்யாமொழி என்பவரது மகன் மகேஷ்குமார் (25). மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன.

மகேஷ்குமார் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (27), மணிகண்டன் (25) ஆகியோருடன், வெள்ளாகுளத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி காரில் சென்றார். திருவேங்கடம் அருகே புதுப்பட்டி பகுதியில், அந்தவழியாக வந்த இருசக்கர வாகனம்மீது மோதியதுடன், அருகில் உள்ளமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கானாம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் (55) என்பவரும் காயமடைந்தார்.

அவர்கள் கோவில்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே மகேஷ்குமார் உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE