வேன் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிராஜ். இவரது மகள் கற்பகவல்லி. இவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் திருமணம் முடிந்து வசித்து வருகிறார். நேற்று கரிவலம்வந்தநல்லூர் அருகில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் கற்பகவல்லி மகளுக்கு காதணி விழா நடந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கண்டிகைபேரி கிராமத்தில் இருந்து உறவினர்களை கனிராஜ் வேனில் மலையடிப்பட்டி அழைத்துச் சென்றார். விழா முடிந்து மதியம் அனைவரும் வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை கண்டிகைபேரியைச் சேர்ந்த ஜோதி(35) என்பவர் ஓட்டினார். சங்கரன்கோவில் அருகில் உள்ள பெரும்புதூரில் வேகத்தடை மீது வேன் வேகமாக ஏறியபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த முருகன் மகன் செந்தூர்பாண்டி(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். சங்கரன்கோவில், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE