ராணிப்பேட்டை மாவட்டத்தில் - கூடுதல் கேமராக்கள் பொருத்த ஆலோசனை :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங் களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1,044 கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குற்றச்சம்பவங்களை தடுக்க...

இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் தில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில், ராணிப்பேட்டை மாவட் டத்தில் சிறு, சிறு குற்றங்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்