இந்நிலையில் அருண்குமார் நேற்று காலை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உறவினர்கள் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில் அவரது மனைவி வைஷ்ணவியும், இதே ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(27) ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. தங்கள் பழக்கத்துக்கு இடையூறாக இருந்ததால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரிவித்தனர். கூடலூர் போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.