இன்றைய மின்தடை :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தில் இன்று (ஏப். 22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் பொன்மார், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்தூர், வெளிச்சை, ரத்தினமங்கலம், கண்டிகை, வெங்கம்பாக்கம், கீழக்கோட்டையூர், கேளம்பாக்கம், தையூர், ஓஎம்ஆர் சாலையின் ஒருபகுதி மற்றும் சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்