ஏப்ரல் 25-ல் மகாவீர் ஜெயந்தி: டாஸ்மாக் விடுமுறை :

மகாவீர் ஜெயந்தி மற்றும் மே தினத்தை முன்னிட்டு முறையே ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் விதிகள் படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE