காங். நிர்வாகி வீட்டில் 22 பவுன் நகை திருட்டு :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பாலாறு 3-வது நகர் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் (40). இவர் செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதற்காக கடந்த 6-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார்.

இந்நிலையில் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து இருப்பதாக நேற்றுஅக்கம்பக்கத்தினர், பிரவீண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக பிரவீன்குமா, ர்செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த ஒருவாரமாக வீட்டில் யாரும் இல்லைஎன்பதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்