கரும்பு வெட்டும் தொழிலாளி கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு :

மதியத்துக்குப் பிறகு கந்தன் உள்ளிட்ட 11 பேரும், தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, மது போதையில் இருந்த கந்தன் தவிர, மற்ற அனைவரும் குளித்துவிட்டு, கிணற்றிலிருந்து வெளியே வந்தனர். நீண்ட நேரமாகியும் கந்தன் கிணற்றிலிருந்து வெளியே வராததால், சக தொழிலாளர்கள் கிணற்றுக்குச் சென்று பார்த்தபோது, கந்தன் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE