கரோனா பரவல் காரணமாக - திருத்தணி கோயிலில் பால்குட ஊர்வலம் ரத்து :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் வரும் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, 1000 பால்குடம் ஊர்வலம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கோயில்களில் திருவிழாக்கள், ஊர்வலம் நடத்தக் கூடாதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆட்சியர் பொன்னையா உத்தரவின்படி, திருத்தணி முருகன் கோயிலில் வரும் 14-ம் தேதி நடைபெற இருந்த ஆயிரம் பால்குட ஊர்வலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற இருந்த 1000 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்