மாமல்லபுரம் அருகே சாலை விபத்தில் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு :

மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் பகுதியில் ஈசிஆர் சாலையைக் கடக்க முயன்றபோது, இந்த கார் மீது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த மற்றொரு கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜய், பூபாலன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அப்துல்ரசாக், சுவேதா ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல, இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்