சிறுபான்மையினரின் பாதுகாவலனாக மாயையை ஏற்படுத்தியுள்ள திமுக : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு

சிறுபான்மையினரின் பாது காவலன் என முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு மாயையை திமுக ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால் அதிமுக அரசு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் பேகம்பூரில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:

நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் திமுகவுக்கு நீங்கள் நிரந்தர ஓய்வு கொடுக்க முடியும். சிறுபான்மையினரின் பாதுகாவலன் என முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு மாயையை திமுக ஏற்படுத்தி வைத்துள்ளது. அவர்களை ஓட்டு வங்கியாக மட்டும் திமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு சிறுபான்மையினருக்குப் பாது காப்பு அரணாக விளங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் அடிப்படை தேவை களான குடிநீர், சாலை, மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளேன். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தொடர நீங்கள் ஆதரிக்க வேண்டும், என்றார்.

இக்கூட்டத்தில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் அன்வர் ராஜா, நடிகர் ரவிமரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்